Tamilnadu
40 ஆண்டுகளாக மண்ணை சாப்பிட்டு உயிர் வாழும் மூதாட்டி: தூத்துக்குடியில் விநோதம்!
வடிவேலு படத்தில், பல்புகளை உண்டு வாழ்வை ஓட்டுவதாக காட்சி ஒன்று அமைக்கப்பட்டது நகைப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தூத்துக்குடியில் உள்ள 80 வயது பாட்டி மண்ணை உண்டு வாழ்ந்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்தையாபுரத்தில் உள்ள சூசைநகர் பகுதியில் வசித்து வருபவர் மூதாட்டி மரிய செல்வம். 80 வயதான் இந்த பாட்டி, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணை மட்டுமே வேளைக்கு சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மண்ணை சலித்து பத்திரப்படுத்தி, அதனை அவ்வப்போது அள்ளி சாப்பிட்டு வருகிறார் இந்த மூதாட்டி. மிட்டாய் சாப்பிடுவது போன்று மண்ணை சாப்பிட்டு வருகிறார்.
தொடக்கத்தில் மண்ணை சாப்பிடும் போது வயிற்று வலி வந்ததாகவும், காலப்போக்கில் எந்த பிரச்னையும் ஏற்படுத்தவில்லை என்றும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளாக மண்ணை சாப்பிட்டு வந்ததாலும், 80 வயதாகும் மரிய செல்வம் பாட்டிக்கு எவ்வித உடல் உபாதைகளும் ஏற்பட்டதில்லை என அக்கம்பக்கத்தினரும், குடும்பத்தினரும் கூறுவதும் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !