Tamilnadu
40 ஆண்டுகளாக மண்ணை சாப்பிட்டு உயிர் வாழும் மூதாட்டி: தூத்துக்குடியில் விநோதம்!
வடிவேலு படத்தில், பல்புகளை உண்டு வாழ்வை ஓட்டுவதாக காட்சி ஒன்று அமைக்கப்பட்டது நகைப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தூத்துக்குடியில் உள்ள 80 வயது பாட்டி மண்ணை உண்டு வாழ்ந்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்தையாபுரத்தில் உள்ள சூசைநகர் பகுதியில் வசித்து வருபவர் மூதாட்டி மரிய செல்வம். 80 வயதான் இந்த பாட்டி, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணை மட்டுமே வேளைக்கு சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மண்ணை சலித்து பத்திரப்படுத்தி, அதனை அவ்வப்போது அள்ளி சாப்பிட்டு வருகிறார் இந்த மூதாட்டி. மிட்டாய் சாப்பிடுவது போன்று மண்ணை சாப்பிட்டு வருகிறார்.
தொடக்கத்தில் மண்ணை சாப்பிடும் போது வயிற்று வலி வந்ததாகவும், காலப்போக்கில் எந்த பிரச்னையும் ஏற்படுத்தவில்லை என்றும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளாக மண்ணை சாப்பிட்டு வந்ததாலும், 80 வயதாகும் மரிய செல்வம் பாட்டிக்கு எவ்வித உடல் உபாதைகளும் ஏற்பட்டதில்லை என அக்கம்பக்கத்தினரும், குடும்பத்தினரும் கூறுவதும் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை