Tamilnadu
மக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மூடல் : பட்டாசு வெடித்துக் கொண்டாடிய கிராம மக்கள்!
தமிழகம் எங்கும் ஆங்காங்கே பெண்கள் அரசு மதுபானக் கடைக்கு எதிராக பல்வேறு வகையிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க அரசோ மக்களின் போராட்டங்களுக்கு செவிமடுக்காமல் அவர்களை மேலும் மேலும் அடக்கியும், ஒடுக்கியும் வைத்து, டாஸ்மாக் கடைகளின் மூலம் வருவாயைப் பெருக்கிக் கொண்டு வருகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள மங்கைமடம் கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு அதற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டியுள்ளனர்.
மங்கைமடம் கிராமம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் இந்த டாஸ்மாக் கடையை தினந்தோறும் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களை திரட்டி இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், மங்கைமடம் கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த அரசு மதுபான கடையை மூட உத்தரவிட்டார். இதனையடுத்து டாஸ்மாக் கடையை மூடியதை அறிந்த கிராமத்தினர், அந்தக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!