Tamilnadu
வனத்துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 10
தமிழ்நாடு வனத்துறையில் வனக்காவலர் வேலைக்கு 564 காலிப்பணியிடங்களை அறிவித்திருக்கிறது வன சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம்.
இதில் பொதுப்பிரிவினருக்கு 144 இடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 123 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 93 இடங்களும், ஆதி திராவிடர் பழங்குடியினர் பிரிவினருக்கு 188 காலியாக உள்ளன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ரூ.16,600 முதல் ரூ.52,400 வரைக்கும் ஊதிய விகிதம் வழங்கப்படும். 1.7.2019ம் தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 வருடங்கள் வயது தளர்வு அளிக்கப்படும்.
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு, உடற் தகுதித் தேர்வு, உடற் திறன் தேர்வுமற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
உடற் தகுதி தேர்வில், ஆண்கள் 163 செ.மீ உயரம் இருக்க வேண்டும். பழங்குடியின ஆண்கள் 152 செ.மீ உயரம் இருந்தால் போதும். அதேபோல் பெண்கள் மற்றும் திருநங்கைகள் 150 செ.மீ உயரம் இருக்க வேண்டும். பழங்குடியின பெண்கள் 145 செ.மீ உயரம் இருந்தால் போதும்.
www.forests.tn.gov.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 10. ஆன்லைன் எழுத்து தேர்வு அக்டோபர் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறும்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!