Tamilnadu
பா.ஜ.க.வுக்கு அடிபணிந்து செயல்படுகிறது அ.தி.மு.க. - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
முத்தலாக், என்.ஐ.ஏ., ஆர்.டி.ஐ., போன்ற பல மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு மக்களவையில் தனது பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்றி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை சட்டத்திற்கு எதிராக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் வி.சி.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதனையடுத்து பேசிய திருமாவளவன், சிறுபான்மையினருக்கு எதிராகவும், அவர்களை பழிவாங்குவதற்காகவே மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது என குற்றஞ்சாட்டிய அவர் இதனால் இஸ்லாமியர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவரும் சட்டங்களுக்கு எவ்வித எதிர்ப்பு குரலும் கொடுக்காமல் அவர்களுக்கு அடிபணிந்து செல்லும் மாநில அரசையே நாம் கொண்டுள்ளோம் என அ.தி.மு.கவை சாடினார்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!