Tamilnadu
கோவையில் இருந்து வெளிநாடு செல்ல விமான சேவையை அதிகரிக்க சொன்ன ஆ.ராசா - நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் !
தமிழகத்தின் தொழில் நகரமாக கருதப்படும் கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்து வர்த்தக பணிகளுக்காக வெளிநாட்டுக்குச் செல்ல விமான சேவைகள் குறைவாக இருப்பதாக தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கோவையில் இருந்து துபாய், கோலாலம்பூர், பாங்காக் போன்ற முக்கிய நாடுகளுக்குச் செல்வதற்காக விமான போக்குவரத்தை அதிகரிக்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், அது தொடர்பாக மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் இதுகாறும் எடுக்கவில்லை என பேசி ஜூன் 28ம் தேதி நடந்த மக்களவைக் கூட்டத்தின் போது மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் தி.மு.க எம்.பி ஆ.ராசா முறையிட்டார்.
இதனையடுத்து, கடந்த ஜூலை 22 அன்று, ஆ.ராசாவின் கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கோவையில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா, இலங்கை போன்ற பகுதிகளுக்குச் செல்ல ஏர் இந்தியா, சில்க் ஏர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், தற்போது உள்ள நடைமுறையில் வெளிநாட்டு விமானங்களின் சேவைகள் கோவையில் இருந்து உடனடியாக தொடங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும், கோவையில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல இந்திய விமான நிறுவனங்களின் சேவைகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஜூலை 10ம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் விமான போக்குவரத்துத் துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் பூரி பதிலளித்துள்ளார்.
தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவின் சீரிய முயற்சியால் விரைவில் கோவையில் இருந்து மக்களும் வர்த்தகர்களும் தொழில் ஈட்ட வெளிநாடு செல்ல விமானச் சேவைகளை தொடங்கிய வழிவகை செய்யப்படும் எனவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உறுதியளித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!