Tamilnadu
சிலை கடத்தல் வழக்கு கடந்துவந்த பாதை! #ADMKCriminalMinisters
சிலை கடத்தல் வழக்கு கடந்து வந்த பாதைகள் பற்றிய முழு விவரம்
✦ 21 ஜூலை, 2017
சிலைக்கடத்தல் வழக்கில் விசாரணை அதிகாரியாக ஐஜி பொன்.மாணிக்கவேலை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் நியமித்தார்.
✦ ஜூலை, 2017
ஐஜி பொன் மாணிக்கவேலின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு.
✦ செப்டம்பர், 2017
தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
✦ செப்டம்பர், 2017
தமிழக அரசின் மேல்முறையீட்டால் ஐஜி பொன் மாணிக்கவேலின் விசாரணை இரண்டு மாதங்கள் தாமதமாகத் தொடங்கியது.
✦ செப்டம்பர், 2017
மேல்முறையீடு தள்ளுபடி ஆன பிறகு சிலை கடத்தல் விசாரணைக்கு என 200 காவலர்களை தமிழக அரசு ஒதுக்கியது.
✦ செப்டம்பர் 2017 - மே 2018
பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு - அரசு அதிகாரிகள் உட்பட பலர் கைது.
✦ ஜூன் 2018
ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ரயில்வே காவல் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
✦ 31 ஜூலை, 2018
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கைது.
✦ 1 ஆகஸ்ட், 2018
நீதிமன்றத்தால் சிலை கடத்தல் பிரிவு அமைக்கப்பட்ட ஓராண்டு ஆன போதிலும் விசாரணை அறிக்கை வழங்கவில்லை - தமிழக அரசு குற்றச்சாட்டு.
✦ 1 ஆகஸ்ட், 2018
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு.
✦ 2 ஆகஸ்ட், 2018
ஐ.ஜி பொன் மாணிக்கவேலின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனக் கூறி சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை.
✦ 2 ஆகஸ்ட், 2018
சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்.
✦ 7 ஆகஸ்ட், 2018
சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.
✦ 11 அக்டோபர், 2018
சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.
✦ 28 ஜனவரி, 2019
தமிழக அரசு மற்றும் 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில், ஐஜி பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
✦ 12 ஏப்ரல், 2019
சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
✦ 11 ஜூன், 2019
வழக்கு விசாரணையில் அமைச்சர், டிஜிபி தலையிடுகிறார்கள் என பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார்.
✦ 24 ஜூலை, 2019
சிலைக் கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளதாக பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் தகவல்.
Also Read
-
“கவர்ச்சியால் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றீர்கள்?” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”