Tamilnadu
தமிழுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? உணவுக்கு பதில் பெட்ரோலை குடிக்க முடியுமா? - கனிமொழி சரமாரி கேள்வி!
சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்து, நிர்மலா சீதாராமனுக்கும் மத்திய அரசுக்கும் அடுக்கடுக்கான கேள்வியை முன்வைத்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தமிழ் மொழி வளர்ச்சிக்காக இதுவரை மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை பட்டியலிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அது மட்டுமில்லாமல், மத்திய அரசு கொண்டுவரும் புது திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் கூட பெயரை வைக்காமல் அதில் இந்தியை மட்டுமே திணித்து வருகிறது என பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டுக்கு மிக அவசியம். விவசாயிகளுக்கென இருக்கும் விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வராதீர்கள். உணவுக்கு பதில் பெட்ரோலை குடிக்க முடியாது என பலமுறை தெரிவித்துள்ளோம் என மத்திய அரசுக்கு பதிலளித்துள்ளார்.
அதேபோல், 8 வழிச்சாலை திட்டத்தை அதிவிரைவு சாலைத் திட்டம் என பெயர் மாற்றினாலும் விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்துக்கும் தி.மு.க. ஆதரவு தெரிவிக்காது என பேசியுள்ளார்.
Also Read
-
திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு... என்னென்ன கட்சிகள்? எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
“பாஜக ஒரு பாறாங்கள்.. அதை கட்டிக்கொண்டு தண்ணீரில் விழுந்தால்...” - நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கு!
-
“டில்லி சரணம் பாடி பழனிசாமி.. அதிகார பங்கிற்கு ஒரு கட்சியும் ஏறிட்டு பார்க்கவில்லை..” - கி.வீரமணி தாக்கு!
-
சென்னையில் புதிதாக 40,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்! : மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தகவல்!
-
“NDA கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? அ.தி.மு.க.வா? அல்லது பா.ஜ.க.வா?” : அமைச்சர் சேகர்பாபு கேள்வி!