Tamilnadu
“எங்களையும் தனி மாவட்டமா பிரிச்சு விடுங்க” : மயிலாடுதுறை மக்கள் போராட்டம்!
அண்மையில் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்தது தமிழக அரசு. அதனையடுத்து இந்த வாரம் சட்டப்பேரவையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை 34வது மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தில் உள்ள செங்கல்பட்டை 35வது மாவட்டமாகவும் பிரித்து உத்தரவிட்டது தமிழக அரசு.
இதனையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியையும் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி இரண்டாவது நாளாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மக்கள் தொகை அதிகமாக உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி குத்தாலம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வணிகர்களின் இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும், மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வருகிற ஜூலை 22 அன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காவிடில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!