Tamilnadu
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? - தேர்தல் தேதியை அறிவிக்க உச்ச நீதிமன்றம் கெடு
தமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு இதுவரை நடத்தவில்லை.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே.எஸ்.சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், அக்டோபருக்குள் வார்டு மறுவரையறைக்கான பணிகள் நிறைவு பெறும் என உறுதி அளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!