Tamilnadu
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? - தேர்தல் தேதியை அறிவிக்க உச்ச நீதிமன்றம் கெடு
தமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு இதுவரை நடத்தவில்லை.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே.எஸ்.சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், அக்டோபருக்குள் வார்டு மறுவரையறைக்கான பணிகள் நிறைவு பெறும் என உறுதி அளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?