Tamilnadu
இன்று தொடங்குகிறது சிறப்பு பிரிவினருக்கான MBBS, BDS கலந்தாய்வு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 3,968 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,070 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. இதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 எம்.பி.பி.எஸ். இடங்களும், 690 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.
நடப்பு ஆண்டில் மேற்குறிப்பிட்ட மருத்துவ இடங்களுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அரசு ஒதுக்கீட்டு மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்குகிறது.
முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 558 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 9) தொடங்கி வருகிற 13ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும்.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!