Tamilnadu
இன்று தொடங்குகிறது சிறப்பு பிரிவினருக்கான MBBS, BDS கலந்தாய்வு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 3,968 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,070 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. இதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 எம்.பி.பி.எஸ். இடங்களும், 690 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.
நடப்பு ஆண்டில் மேற்குறிப்பிட்ட மருத்துவ இடங்களுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அரசு ஒதுக்கீட்டு மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்குகிறது.
முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 558 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 9) தொடங்கி வருகிற 13ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும்.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!