Tamilnadu
சோழவரம் ஏரி தூர்வாரும் பணியை திடீரென நிறுத்தியது ஏன்? : பொதுமக்கள் கண்டனம்!
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை பெருநகரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் வறட்சி ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு நீராதாரமாக உள்ள சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் வறண்டு கிடப்பதால் தண்ணீருக்காக இரவு பகலாக மக்கள் திண்டாடி வருகின்றனர். ஆகவே, நீர் நிலைகளை தூர்வாரச் சொல்லி பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, சோழவரம் ஏரியை தூர்வாரும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஏரியை தூர்வாரும் பணி மே மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் தூர்வாரும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் ஏரியின் மணல் திட்டுகளுக்கு இடையே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தூர்வாரும் பணியை மேற்கொள்ளக் கூடாது என அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என இயற்கை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைக்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !