Tamilnadu
காஞ்சிபுரம் : போலீசார் திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு மினி பேருந்து மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக காவல்துறையினர் ஆட்டோக்களை அனுமதிக்க மறுத்து உள்ளனர்.
இதுகுறித்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரிடம், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பவர் கேட்டுள்ளார். அதற்கு போலீசார், தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த குமார் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.
தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை மீட்ட போலீசார் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை ஏழை பெண்களுக்கு எதிரானதாகும்” : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
மும்பையில் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்: நீதி கேட்கும் பெற்றோர் - நடந்தது என்ன?
-
“அ.தி.மு.க - பா.ஜ.க.வின் டெபாசிட்டுக்கு ஆபத்து வந்துவிட்டது! பரிதாபமாக இருக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்!
-
“திமுக 7-வது முறையாக ஆட்சி அமைக்க ஒற்றுமையோடும் உறுதியோடும் உழைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!