Tamilnadu
காஞ்சிபுரம் : போலீசார் திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு மினி பேருந்து மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக காவல்துறையினர் ஆட்டோக்களை அனுமதிக்க மறுத்து உள்ளனர்.
இதுகுறித்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரிடம், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பவர் கேட்டுள்ளார். அதற்கு போலீசார், தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த குமார் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.
தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை மீட்ட போலீசார் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!