Tamilnadu
காஞ்சிபுரம் : போலீசார் திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு மினி பேருந்து மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக காவல்துறையினர் ஆட்டோக்களை அனுமதிக்க மறுத்து உள்ளனர்.
இதுகுறித்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரிடம், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பவர் கேட்டுள்ளார். அதற்கு போலீசார், தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த குமார் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.
தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை மீட்ட போலீசார் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!