Tamilnadu
புதுமணத் தம்பதியை சரமாரியாக வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் : மீண்டும் தலைதூக்கும் ஆணவக்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் சோலைராஜா என்ற உப்பள தொழிலாளி. இவர் பல்லாகுளத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பேச்சியம்மாளை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். பின்னர், குளத்தூரில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு இருவரும் வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம கும்பல் உட்புகுந்து சோலை ராஜாவையும், பேச்சியம்மாளையும் சரமாரியாக வெட்டி கொன்றனர்.
தங்களது எதிர்ப்பை மீறி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மணமுடித்த ஆத்திரத்தால் பேச்சியம்மாளின் பெற்றோர் மர்ம கும்பலை ஏவி விட்டு கொலை செய்ய வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சிதம்பரம் தொகுதி எம்.பி., திருமாவளவன் மக்களவையில் ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான சட்டம் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘கிரிமினல்களின் கூடாரமாக தவெக’.. 20 நாளில் த.வெ.க. நிர்வாகிகள் ஆடிய ஆட்டம் : முரசொலி விமர்சனம்!
-
“கவர்ச்சியால் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றீர்கள்?” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!