Tamilnadu
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் : ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு அளித்துள்ளார்.
சென்னையில் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்ட பறக்கும் ரயில் திட்டம் 2007ம் ஆண்டு வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 5 கிமீ இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரிவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
தற்போது அதற்கான சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்ட நிலையில் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!