Tamilnadu
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் : ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு அளித்துள்ளார்.
சென்னையில் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்ட பறக்கும் ரயில் திட்டம் 2007ம் ஆண்டு வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 5 கிமீ இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரிவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
தற்போது அதற்கான சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்ட நிலையில் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.
Also Read
-
தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார் : 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
-
பிரதமர் மோடி பாட வேண்டியது ‘வந்தே ஏமாத்துறோம்' : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!