Tamilnadu
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் : ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு அளித்துள்ளார்.
சென்னையில் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்ட பறக்கும் ரயில் திட்டம் 2007ம் ஆண்டு வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 5 கிமீ இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரிவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
தற்போது அதற்கான சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்ட நிலையில் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!