Tamilnadu
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் : ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு அளித்துள்ளார்.
சென்னையில் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்ட பறக்கும் ரயில் திட்டம் 2007ம் ஆண்டு வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 5 கிமீ இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரிவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
தற்போது அதற்கான சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்ட நிலையில் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.
Also Read
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளி அன்று இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் : மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
-
RSS நிகழ்ச்சிகளுக்கு தடை? : தமிழ்நாட்டை பின்பற்ற தொடங்கிய கர்நாடகா - அமைச்சருக்கு மிரட்டல்!
-
பீகார் தேர்தல் : கட்சியிலிருந்து விலகும் மூத்த தலைவர்கள் - அதிர்ச்சியில் நிதிஷ்குமார்!