Tamilnadu
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை நீட்டிப்பு : உச்சநீதிமன்றம் ஆணை!
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் மருத்துவர்களை விசாரிப்பதற்கு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு இருக்க வேண்டும் எனக் கோரியும் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அப்போலோ மருத்துவமனை.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், அப்போலோவின் வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக பதிலளிக்க 4 வார காலம் அவகாசம் தேவை என தமிழக அரசு சார்பில் கோரப்பட்டதால் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 வாரம் காலம் தடை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில், அண்மையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை 4 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?