Tamilnadu
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை நீட்டிப்பு : உச்சநீதிமன்றம் ஆணை!
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் மருத்துவர்களை விசாரிப்பதற்கு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு இருக்க வேண்டும் எனக் கோரியும் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அப்போலோ மருத்துவமனை.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், அப்போலோவின் வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக பதிலளிக்க 4 வார காலம் அவகாசம் தேவை என தமிழக அரசு சார்பில் கோரப்பட்டதால் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 வாரம் காலம் தடை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில், அண்மையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை 4 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!