Tamilnadu
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை நீட்டிப்பு : உச்சநீதிமன்றம் ஆணை!
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் மருத்துவர்களை விசாரிப்பதற்கு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு இருக்க வேண்டும் எனக் கோரியும் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அப்போலோ மருத்துவமனை.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், அப்போலோவின் வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக பதிலளிக்க 4 வார காலம் அவகாசம் தேவை என தமிழக அரசு சார்பில் கோரப்பட்டதால் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 வாரம் காலம் தடை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில், அண்மையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை 4 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவலம் : ஒரே படுக்கையில் 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை!