Tamilnadu
விவாதிக்கவேண்டிய முக்கிய பிரச்னைகளை ஆலோசிக்க தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்பவேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, 8 வழிச்சாலை திட்டம், அணுக்கழிவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது உள்ளிட்ட முக்கியக் கவனம் பெறவேண்டிய பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது குறித்து கலந்தாலோசிக்க கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், தங்கள் பகுதியில் நிலவக்கூடிய முக்கியப் பிரச்னைகளையும், முக்கிய கவனம் பெறவேண்டிய பிரச்னைகள் குறித்தும் தி.மு.க அறிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் விவாதிக்கக் கோரிய பிரச்னைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
Also Read
-
“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
-
“தி.மு.க கூட்டணி மீண்டும் அரியணை ஏறும்” : Poll Tracker வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவு!
-
"அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிய எனக்கு அங்கீகாரம் இல்லை": முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல்!
-
“மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!