Tamilnadu
விவாதிக்கவேண்டிய முக்கிய பிரச்னைகளை ஆலோசிக்க தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்பவேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, 8 வழிச்சாலை திட்டம், அணுக்கழிவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது உள்ளிட்ட முக்கியக் கவனம் பெறவேண்டிய பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது குறித்து கலந்தாலோசிக்க கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், தங்கள் பகுதியில் நிலவக்கூடிய முக்கியப் பிரச்னைகளையும், முக்கிய கவனம் பெறவேண்டிய பிரச்னைகள் குறித்தும் தி.மு.க அறிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் விவாதிக்கக் கோரிய பிரச்னைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!