Tamilnadu
விவாதிக்கவேண்டிய முக்கிய பிரச்னைகளை ஆலோசிக்க தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்பவேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, 8 வழிச்சாலை திட்டம், அணுக்கழிவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது உள்ளிட்ட முக்கியக் கவனம் பெறவேண்டிய பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது குறித்து கலந்தாலோசிக்க கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், தங்கள் பகுதியில் நிலவக்கூடிய முக்கியப் பிரச்னைகளையும், முக்கிய கவனம் பெறவேண்டிய பிரச்னைகள் குறித்தும் தி.மு.க அறிவித்த மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் விவாதிக்கக் கோரிய பிரச்னைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!