Tamilnadu
பள்ளிக்கூட பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் காயம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளியம்பலம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக் கட்டிடம் பல ஆண்டுகளாக சேதாரத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென்று இன்று காலை பால்கனி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மாணவர்கள் சக்திவேல், குமரவேல், வீரக்குமார் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று மாணவர்களும் தலை மற்றும் கால் பகுதியில் படுகாயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள விளக்குத்தூண் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!