Tamilnadu
மாணவர்கள் இல்லாவிட்டால் கல்லூரிகளை மூட வேண்டியதுதான் : கல்வி அமைச்சரின் அலட்சிய பதில் !
2019-2020ம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ''பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் ஜூலை 3ம் தேதி தொடங்க உள்ளது. நடப்பாண்டில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், 47 ஆயிரம் பேர் முதல் தலைமுறை பட்டதாரி ஆவர்.141 மாற்றுத் திறனாளிகள் மட்டுமே இம்முறை விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரிகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை'' என அவர் தெரிவித்தார்.
Also Read
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!