Tamilnadu
பரோல் வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் இருந்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர். இவர்களின் விடுதலை குறித்த அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், தனது மகளின் திருமணத்திற்காக 6 மாத காலம் பரோல் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல், தன்னை நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினியை ஆஜர்படுத்துவதில் காவல்துறைக்கு என்ன சிரமம் என ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த காவல்துறை கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் என்பதால் ஒருவாரம் அவகாசம் கோரியிருந்தது.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வு அவகாசம் அளித்து, நளினியை ஜூலை 5ம் தேதி பிற்பகலில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
Also Read
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!