Tamilnadu
பரோல் வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் இருந்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர். இவர்களின் விடுதலை குறித்த அமைச்சரவையின் தீர்மானம் ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், தனது மகளின் திருமணத்திற்காக 6 மாத காலம் பரோல் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல், தன்னை நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினியை ஆஜர்படுத்துவதில் காவல்துறைக்கு என்ன சிரமம் என ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த காவல்துறை கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் என்பதால் ஒருவாரம் அவகாசம் கோரியிருந்தது.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வு அவகாசம் அளித்து, நளினியை ஜூலை 5ம் தேதி பிற்பகலில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
Also Read
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!