Tamilnadu
கீழடி அகழ்வாய்வில் பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015ம் ஆண்டில் ஆய்வு தொடங்கப்பட்டது. பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இதுவரை 4 கட்ட அகழாய்வுகள் முடிந்துள்ளன. ஜூன் 13-ம் தேதி ஐந்தாம் கட்ட பணிகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்தப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில் கீழடியில் தோண்டப்பட்ட குழியில் 12 அடி நீளத்திலும் ஒரு அடி அகலத்திலும் பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சுவர் முழுதாகவும் மற்றுமொரு சுவர் 5 அடி நீளத்தில் மட்டும் உள்ளது. இந்தச் சுவர் கட்டிடத்தின் மேல் பகுதியா, கீழ்ப் பகுதியா என்று தற்போது வரை தெரியவில்லை.
சுவரின் அடிவரை தோண்டி எடுக்கப்பட்ட பின்னர்தான் கட்டிடத்தின் முழுமையான வடிவமைப்பைக் கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த இரட்டைச் சுவரை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Also Read
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!