Tamilnadu
கீழடி அகழ்வாய்வில் பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015ம் ஆண்டில் ஆய்வு தொடங்கப்பட்டது. பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இதுவரை 4 கட்ட அகழாய்வுகள் முடிந்துள்ளன. ஜூன் 13-ம் தேதி ஐந்தாம் கட்ட பணிகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்தப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில் கீழடியில் தோண்டப்பட்ட குழியில் 12 அடி நீளத்திலும் ஒரு அடி அகலத்திலும் பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சுவர் முழுதாகவும் மற்றுமொரு சுவர் 5 அடி நீளத்தில் மட்டும் உள்ளது. இந்தச் சுவர் கட்டிடத்தின் மேல் பகுதியா, கீழ்ப் பகுதியா என்று தற்போது வரை தெரியவில்லை.
சுவரின் அடிவரை தோண்டி எடுக்கப்பட்ட பின்னர்தான் கட்டிடத்தின் முழுமையான வடிவமைப்பைக் கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த இரட்டைச் சுவரை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!