Tamilnadu
சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்... வானிலை மையம் எச்சரிக்கை!
2019ம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிய முதல் ஒரு வார காலத்துக்கு மட்டும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நெல்லை, தேனி போன்ற பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பின்னர் வாயு புயல் உருவானதால் பருவமழையும் இல்லாமல் போனது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, வேலூர், நாகை, மதுரை, பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலையும், அனல் காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!