Tamilnadu
குறைந்த விலைக்குக் கேட்கும் ஏற்றுமதியாளர்கள் : ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்ட்ரைக்!
மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களிடம் மீன், இறால் வகைகளை குறைந்த விலைக்கு கேட்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் கடந்த ஜூன் 14-ம் தேதியோடு முடிவடைந்ததையடுத்து மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய பகுதிகளில் இறால், நண்டு மற்றும் பல்வேறு வகையான மீன்களை பிடித்துக்கொண்டு மீனவர்கள் நேற்று கரை திரும்பினர்.
இரண்டு மாத தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்றதால் மீன், இறால், நண்டு ஆகியவை அதிகளவில் மீனவர்களின் வலையில் சிக்கின. இந்நிலையில் அதிக வரத்து காரணமாக ஏற்றுமதியாளர்கள் மீன், இறால், நண்டு ஆகியவற்றை குறைந்த விலைக்கு கேட்டுள்ளனர்.
ஏற்றுமதியாளர்கள் ஒன்றாக இணைந்து சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கேட்பதாக குற்றம்சாட்டிய மீனவர்கள், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!