Tamilnadu
குறைந்த விலைக்குக் கேட்கும் ஏற்றுமதியாளர்கள் : ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்ட்ரைக்!
மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களிடம் மீன், இறால் வகைகளை குறைந்த விலைக்கு கேட்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் கடந்த ஜூன் 14-ம் தேதியோடு முடிவடைந்ததையடுத்து மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய பகுதிகளில் இறால், நண்டு மற்றும் பல்வேறு வகையான மீன்களை பிடித்துக்கொண்டு மீனவர்கள் நேற்று கரை திரும்பினர்.
இரண்டு மாத தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்றதால் மீன், இறால், நண்டு ஆகியவை அதிகளவில் மீனவர்களின் வலையில் சிக்கின. இந்நிலையில் அதிக வரத்து காரணமாக ஏற்றுமதியாளர்கள் மீன், இறால், நண்டு ஆகியவற்றை குறைந்த விலைக்கு கேட்டுள்ளனர்.
ஏற்றுமதியாளர்கள் ஒன்றாக இணைந்து சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கேட்பதாக குற்றம்சாட்டிய மீனவர்கள், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
சீனாவிடம் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம்… இந்தியாவிற்கே வந்து மிரட்டிச் சென்ற அமெரிக்கா!
-
பெண்ணுரிமையை பறைசாற்றிய பாரதியாரைப் போற்றும் 'பாரதியார் இல்லம்' புதிய Instagram வலைதள பக்கம் தொடக்கம்!
-
நெல்லையில் ரூ.30 கோடியில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு... என்னென்ன வசதிகள்? - விவரம்!
-
4.29 லட்சம் வீடுகள்.. 25.56 லட்சம் பேருக்கு பட்டாக்கள்.. ஏழை மக்களின் கனவை நனவாக்கிய திராவிட மாடல்!
-
“நிதிஷ் குமாரின் கதியைப் பார்த்தாவது திருந்த வேண்டும்...” - பழனிசாமிக்கு முரசொலி தலையங்கம் அறிவுரை!