Tamilnadu
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் மூடப்படும் மேன்சன்கள் !
வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாட்டை தலைநகர் சென்னை சந்தித்துள்ள நிலையில், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் சில உணவகங்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தண்ணீர் பிரச்சனையால் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மேன்சன்கள் அனைத்தும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி அதனை சுற்றியுள்ள ஒரு சில மேன்சன்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அங்கு தங்கி இருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், மேன்சன் உரிமையாளர்களும், அங்கு தங்கியிருப்பவர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் அனைத்து மேன்சன்களையும் இழுத்து மூடும் நிலை உருவாகும் என்றும் அங்கு பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!