Tamilnadu
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் மூடப்படும் மேன்சன்கள் !
வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாட்டை தலைநகர் சென்னை சந்தித்துள்ள நிலையில், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் சில உணவகங்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தண்ணீர் பிரச்சனையால் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மேன்சன்கள் அனைத்தும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி அதனை சுற்றியுள்ள ஒரு சில மேன்சன்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அங்கு தங்கி இருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், மேன்சன் உரிமையாளர்களும், அங்கு தங்கியிருப்பவர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் அனைத்து மேன்சன்களையும் இழுத்து மூடும் நிலை உருவாகும் என்றும் அங்கு பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.
Also Read
-
விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால்... : ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
-
தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத... : பூமணி மறைவுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
சாதி பெயரை கூறி இழிவு செய்யப்பட்ட Delivery Boy : புகார் கொடுக்க சென்ற இளைஞரை தாக்கிய போலீஸ்!
-
மதுரை அருகே அதிகாலையில் நடந்த பயங்கரம் : நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் - 6 பேர் பலி!
-
கரூர் கொடுந்துயரம் : சாட்சிகளை அச்சுறுத்தும் விஜய் - உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழுவிடம் தி.மு.க. மனு!