Tamilnadu

தி.மு.கவின் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது அ.தி.மு.க. - கனிமொழி

தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அ.தி.மு.க. அரசு நிரந்தர தீர்வு எதுவும் மேற்கொள்ளவில்லை என சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.

கடல் நீரை குடிநீராக்கு திட்டத்தை தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்தால் அதனை தற்போதைய அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.

நீர் நிலைகளை துர்வாராமல், பராமரிக்காமல் போனதே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான முழு காரணம் என கனிமொழி தெரிவித்தார்.