Tamilnadu
தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாமணி. இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவராகவும் இருந்து வந்தார். தமிழக சட்ட சபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிறிய காலம் வீட்டில் ஓய்வு எடுத்துவந்த நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமான காரணத்தால் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூன் 14) அதிகாலை 5 மனியளவில் உயிரிழந்தார். தகவலறிந்து விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ராதாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ராதாமணி உயிரிழந்த செய்தி அறிந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுச்சேரி சென்று ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள ராதாமணி எம்.எல்.ஏ.வின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் ராதாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!