Tamilnadu
கேள்விக்குறியாகிறது தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு!
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் 5ல் வெளிவந்தன. தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரம் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில், 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்ச்சியடைந்த 2 ஆயிரம் மாணவர்களில் 3 பேர் மட்டுமே 400க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். 300க்கு மேல் 29 மாணவர்கள் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், 453 மார்க் எடுத்த மாணவிக்கு மருத்துவ சீட் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், 440 எடுத்த மாணவருக்கு இடஒதுக்கீட்டு அடிப்படையிலும், 404 மார்க் எடுத்த மாணவருக்கு சுயநிதி கல்லூரியிலும் சீட் கிடைக்க உள்ளது.
300 மார்க் எடுத்த 3 மாணவ, மாணவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டின் கீழும், 250க்கு மேல் எடுத்துள்ள ஓரிரு பேருக்கு மருத்த இடம் கிடைக்கவுள்ளதாக தெரிகிறது.
எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் வெறும் 10 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்து போயுள்ளது.
Also Read
-
பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு : தோல்வியை மறைக்க ஒன்றிய அரசு முயற்சி - உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“திசை திருப்பும் உக்தியை செய்கிறது தவெக.. ஆதவ் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்”: சிவசங்கர் எச்சரிக்கை!
-
மாணவர்களின் கல்வி கனவை பறிப்பதா? - நீட் எதிர்ப்பு போராட்டத்தில் திமுகவினர் பங்கேற்பு: RS.பாரதி அறிக்கை!
-
“நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக” : பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!