Tamilnadu
24 மணி நேரமும் கடைகளை நடத்தவிடாமல் இடையூறு செய்யும் காவல்துறை : விக்கிரமராஜா புகார்!
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் காவல்துறையினர் ஆங்காங்கே இடையூறு செய்வது தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா.
இதுகுறித்துப் பேசிய அவர் “24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்யலாம் என்று தமிழக அரசு அரசாணை ஒன்றினை வெளியிட்டது. அதன்படி இரவு நேரங்களிலும் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளைத் திறந்து வைத்து தங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் இரவு நேரங்களில் கடைகளை அடைக்கும்படி வற்புறுத்துவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார் விக்கிரமராஜா.
மேலும், கடைகளைத் திறப்பதற்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று விரைவில் முதலமைச்சரைச் சந்தித்து மனு ஒன்றினை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் விக்கிரமராஜா. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!