Tamilnadu
தரமற்ற பொறியியல் கல்லூரிகளிடம் லஞ்சம் பெற்றதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்!
தமிழகத்தில் இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளில் 92 பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என சமிபத்தில் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா வெளியிடாமல் நிலுவையில் வைத்துள்ளார்.
அந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டால் தான் அதில் மாணவர்கள் சேராமல் தடுத்து நிறுத்தமுடியும். எனவே பட்டியலை வெளியிட வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, லஞ்சம் வாங்கிக்கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பெயர் பட்டியலை வெளியிட மறுத்து வருகிறார் என லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்படுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !