Tamilnadu
மொபைல் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்த மருத்துவர்கள்: மின்வெட்டால் சிவகங்கையில் நடந்த அவலம்!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் மின்வெட்டு ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் ஐவர் வெண்டிலேட்டர் செயல்படாததால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது என்று கூறலாம்.
இதேபோல், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டு 3 மணிநேரம் ஆகியும் மின்சாரம் வராமல் உள் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
அதுமட்டுமில்லாமல், அவரச சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு மின்சாரம் இல்லாததால் செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விபத்து காரணமாக சிகிச்சைக்கு வந்தவர்களையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மருத்துவமனையில் உள்ள பார்வையாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இல்லாமையே மின்வெட்டை சீரமைக்காததற்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முன்னதாக, தமிழகத்தில் மின்வெட்டே இல்லையென கொக்கரித்திருக்கிறார் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!