Tamilnadu
அரசு அலுவலகங்களில் துப்பட்டா கட்டாயம் : கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ.க.,வாக உருமாறும் அ.தி.மு.க
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு குறித்து அ.தி.மு.க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அரசு அலுவலகங்களுக்கு வரும் பெண்கள் சேலை, சுடிதார் மற்றும் சல்வார் கமிஸ் ஆடைகளை மட்டுமே உடுத்த வேண்டும். குறிப்பாக சுடிதார், சல்வாருடன் கட்டாயம் துப்பட்டா அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதேபோல், ஆண்கள் சாதாரண பேண்ட் சட்டை அல்லது கோட் அணிந்து வரலாம் என்றும், அடர் நிற ஆடைகளோ, டீ.சர்ட்களோ அணியக் கூடாது என்றும் கெடுபிடி தந்துள்ளது.
பெண்கள் அணியும் ஆடையால் மற்றவர்கள் ஈர்க்கப்பட்டு கவனச் சிதறலை ஏற்படுத்தும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பெண் சுதந்திரம், பெண் உரிமையை போற்றுவோம் என்றெல்லாம் மேடைக்கு மேடை பேசிவிட்டு, துப்பட்டா அணிய கட்டாயப்படுத்தி வரும் அ.தி.மு.க அரசு, கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ.க.,வின் மனநிலையை திராவிட கொள்கைகள் கொண்ட மக்களிடம் திணிக்க முற்படுவது இந்த செயலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !