Tamilnadu
தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்? : தமிழக தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது : "தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்று வாக்காளர்கள் பிரிக்கப்படவேண்டும். அதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 5.86 கோடி வாக்காளர்களை 1 லட்சத்து19 ஆயிரம் வார்டுகளுக்கு பிரிக்கவேண்டும்.
இவற்றில் மாநகராட்சிக்கு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படும் மற்றவற்றிற்கு வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூலை இரண்டாம் வாரத்திற்குள்ளாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாராகிவிடும் அதன் பின்னர் வரும் ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தமுறை வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்துவது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!