Tamilnadu
தமிழகத்தின் தலைநகரை கைபற்றிய தி.மு.க : சென்னையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலை!
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது முடிந்துள்ளது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், கலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மே 19-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து. அதனை தொடர்ந்து தற்பொழுது வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக தலைநகர் சென்னையைக் கைப்பற்றியது தி.மு.க வடசென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி 2,13,922 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்.
மத்திய சென்னையில் தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறன் 1,99,244 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்கள்.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 1,05,380 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!