Tamilnadu
தமிழகத்தின் தலைநகரை கைபற்றிய தி.மு.க : சென்னையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலை!
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது முடிந்துள்ளது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், கலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மே 19-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து. அதனை தொடர்ந்து தற்பொழுது வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக தலைநகர் சென்னையைக் கைப்பற்றியது தி.மு.க வடசென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி 2,13,922 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்.
மத்திய சென்னையில் தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறன் 1,99,244 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்கள்.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 1,05,380 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!