Tamilnadu
குழந்தை விற்பனை வழக்கில் 3 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் செவிலியர் உதவியாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா தர்மபுரியை சேர்ந்த ஒருவரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தை விற்பனையில் அவருக்கு உதவியாக இருந்த கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தரகர் அருள்ஜோதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகள் விற்பனை தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையைத் தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைதாகிகைதாகி சிறையில் உள்ள அருள்சாமி, லீலா, செல்வி ஆகியோர், ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனசேகரன், 3 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து, 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Also Read
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!