Tamilnadu
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஜூன் 12ம் தேதி விவசாயிகள் சங்கம் போராட்டம் !
தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கத்தின் செயற்குழு கூட்டம், நாகையில் இன்று (13.05.2019) நடைபெற்றது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரி, வரும் ஜூன் மாதம் 12- ம் தேதி விழுப்புரம், புதுவை, கடலூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், விவசாயிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!