Tamilnadu
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஜூன் 12ம் தேதி விவசாயிகள் சங்கம் போராட்டம் !
தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கத்தின் செயற்குழு கூட்டம், நாகையில் இன்று (13.05.2019) நடைபெற்றது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரி, வரும் ஜூன் மாதம் 12- ம் தேதி விழுப்புரம், புதுவை, கடலூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், விவசாயிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !