Tamilnadu
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஜூன் 12ம் தேதி விவசாயிகள் சங்கம் போராட்டம் !
தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கத்தின் செயற்குழு கூட்டம், நாகையில் இன்று (13.05.2019) நடைபெற்றது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரி, வரும் ஜூன் மாதம் 12- ம் தேதி விழுப்புரம், புதுவை, கடலூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், விவசாயிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்!
-
"தியாகத்தின் அடையாளமாய்... கொள்கையில் இமயமாய்..." விடைபெற்றுள்ளார் தோழர் நல்லகண்ணு! - முரசொலி!
-
உயிர்நீத்த 22 தியாகிகளுக்கு நினைவுத் தூண் : தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் சிலை!
-
இதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பிறந்தநாள் பரிசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
-
பயணிகளுக்காக... 100 புதிய குளு குளு மின்சார AC BUS.. அதிநவீன சொகுசு BUS.. தொடங்கி வைத்தார் துணை முதல்வர்!