Tamilnadu
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : மேலும் ஒருவரை கைது செய்தது சி.பி.ஐ!
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ அதிகாரிகள் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதாகியுள்ள நிலையில், தற்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த மணிவண்ணன் என்ற இளைஞரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Also Read
-
“மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அரசு எப்போதும் துணை நிற்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
ஆவின் பச்சை நிற பால் விலை உயர்வா?.. : அவதூறு பரப்பும் தவெக.. - உண்மையை விளக்கிய TN Fact Check!
-
விறுவிறுப்பாக தயாராகும் தி.மு.க தேர்தல் அறிக்கை! : 4 நாட்களில் 52,080 பரிந்துரைகள் தெரிவித்த பொதுமக்கள்!
-
உலகம் உங்கள் கையில் : “அனைத்து வகையிலும் வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு!” - முரசொலி புகழாரம்!
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!