Tamilnadu

உயிரை பறித்த நீட்: தேர்வு எழுதிவிட்டு ஊருக்குத் திரும்பிய மாணவி பரிதாபமாக பலி!

இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா 17 வயது மாற்றுத்திறனாளி மகள், இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார்,

தேர்வு முடித்து விட்டு பேருந்தில் ராமநாதபுரம் சென்று கொண்டிருக்கும் போது திருப்புவனம் அருகே சென்றபோது மாணவி மயங்கி விழுந்துள்ளார், பதறிப்போன தந்தை முனியசாமி, திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மகளை கொண்டு சென்றார். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த தெரிவித்தார். நீட் தேர்வு எழுத வந்த இடத்தில் மாற்றத்தினால் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.