Tamilnadu
‘தமிழாற்றுப்படை’யின் நிறைவுக் கட்டுரை - தந்தை பெரியாரை ஆய்வு செய்யும் வைரமுத்து!
தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகக் கவிப்பேரரசு வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார்.
இதுவரை தொல்காப்பியர், அவ்வையார், கபிலர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கம்பர், அப்பர், ஆண்டாள், திருமூலர், வள்ளலார், உ.வே.சாமிநாதையர், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், கலைஞர், மறைமலையடிகள், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், பேரறிஞர் அண்ணா என 23 ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளை அரங்கேற்றியிருக்கிறார்.
‘தமிழாற்றுப்படை’ வரிசையின் நிறைவுக் கட்டுரையாக, 24-ம் ஆளுமையாக தந்தை பெரியாரை ஆய்வு செய்து திருச்சியில் இன்று மாலை அரங்கேற்ற இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு ‘தமிழாற்றுப்படை’யின் இறுதி நிகழ்வு நடைபெறுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, பேராசிரியர் அருணன் ஆகியோர் இந்த விழாவில் உரையாற்ற இருக்கின்றனர்.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!