Tamilnadu
நீட் தேர்வு : பலத்த சோதனைகளுக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. 15 லட்சம் மாணவ மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் நீட் தேர்வு எழுதும் மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் தேர்வுக்கு நண்பகல் 12 மணிக்கே மாணவர்கள் பலத்த சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தாங்கள் அணிந்து வந்த அணிகலன்களை அகற்றிய பின்னரே மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆதார் கார்டு இல்லாமல் வந்த மாணவர்களும், காலதாமதமாக வந்த மாணவர்களும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்கள் அணிந்திருந்த கால்சட்டைகளில் மெட்டல் ஜிப் இருந்ததால் அனுமதிக்க மறுத்ததாக தகவல் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!