Tamilnadu
விவசாய பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஓ.என்.ஜி.சி , வேதாந்தா, ஹைட்ரோ கார்பன் குறித்து தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
வேதாந்தா, ஓ.என்.ஜி.சி 40 எண்ணெய் கிணறுகள் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.அதனை தடுக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தலைமை செயலாளரிடம் அது குறித்து மனு கொடுத்துள்ளோம்.
உபரி நீரையும் தடுக்கும் பொருட்டு காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி முயல்கிறார் என குற்றம் சாட்டிய அவர், ராசிமனலில் புதிய அணை தமிழகத்துக்காக கட்ட வேண்டும் அதன் மூலம் தண்ணீர் மற்றும் விவசாய பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை ஏழை பெண்களுக்கு எதிரானதாகும்” : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
மும்பையில் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்: நீதி கேட்கும் பெற்றோர் - நடந்தது என்ன?
-
“அ.தி.மு.க - பா.ஜ.க.வின் டெபாசிட்டுக்கு ஆபத்து வந்துவிட்டது! பரிதாபமாக இருக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்!
-
“திமுக 7-வது முறையாக ஆட்சி அமைக்க ஒற்றுமையோடும் உறுதியோடும் உழைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!