Tamilnadu
டான்ஸெட் தேர்வுகளை, அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் - துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு !
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பொறியியல் உயர் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான டான்ஸெட் தேர்வுகளை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும். இன்று மாலை இது குறித்த அறிவிப்பு வெளியாகும். டான்ஸெட் தேர்வுக்கான விளம்பரம், இந்த வார இறுதிக்குள் வெளியாகும்.
டான்ஸெட் தேர்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம், இன்று காலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில், டான்ஸெட் அட்டவணை குறித்தும் தேர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. டான்ஸெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக ஏற்கனவே கொடுக்கப்பட்ட காலக்கெடு, மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேட் (GATE) தேர்வு எழுதியவர்களும் டான்செட் தேர்வு எழுதலாம் என்றார்.
மேலும், பொறியியல் மேற்படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. சில மாணவர்கள், மேற்படிப்பு படிப்பதால் பயன் இல்லை என்று எண்ணுகின்றனர், சிலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர், மேலும், பொறியியல் படித்தவர்களுக்கு இந்தியாவில் முறையான வேலை வாய்ப்பு ஏற்படுவதில்லை எனக் கூறினார்.
Also Read
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!