Tamilnadu
அதி தீவிர புயலாக வலுப்பெற்றது ஃபானி புயல்: வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
ஃபானி புயல் இன்று அதிகாலை அதி தீவிர புயலாக வலுப்பெற்று சென்னையின் தென் மேற்கே 575 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வடக்கு மற்றும் வடகிழக்கில் உள்ள ஒடிசா கடற்கரையை நோக்கிச் செல்லக்கூடும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மணிக்கு 30-50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
ஆகையால் இன்று தென் மேற்கு வங்கக்கடலுக்கும், நாளை மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடலுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!
-
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!