Tamilnadu
அதி தீவிர புயலாக வலுப்பெற்றது ஃபானி புயல்: வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
ஃபானி புயல் இன்று அதிகாலை அதி தீவிர புயலாக வலுப்பெற்று சென்னையின் தென் மேற்கே 575 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வடக்கு மற்றும் வடகிழக்கில் உள்ள ஒடிசா கடற்கரையை நோக்கிச் செல்லக்கூடும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மணிக்கு 30-50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
ஆகையால் இன்று தென் மேற்கு வங்கக்கடலுக்கும், நாளை மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடலுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!