Tamilnadu
“ஃபோனி புயல்: மே 2 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்” - வானிலை மையம் எச்சரிக்கை
சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 870 கிமீ தொலைவில் ஃபோனி புயல் நிலைகொண்டுள்ளது. இது, தீவிர புயலாகவும், நாளை அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் கரைக்கு அருகே சுமார் 300 கிமீ தொலைவில் வரக்கூடும்.
இதனால் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ஏப்.,30 மற்றும் மே 1ம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நாளை காலை மணிக்கு 40-60 கிமீ வேகத்திலும், மாலை 50-70 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்.,30 மற்றும் மே 1ம் தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மே 2ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!
-
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!