Tamilnadu
“குழந்தைகள் விற்பனைக்கு...” - தமிழகத்தின் பெரும் அவலம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட செவிலியர் அமுதாவிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் மூலம் குழந்தைகள் விற்பனையில் தொடர்புடைய செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தரகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
குழந்தைகளின் நிறம், பாலினம், ஆரோக்கியம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து குழந்தைகளின் விலை நிர்ணயிக்கப்படும் என ஓய்வுபெற்ற செவிலியர் பேசியது தமிழக தாய்மார்களையும், பொதுமக்களையும் உலுக்கியது.
சிலபல ஆண்டுகளாகவே இந்த சட்டவிரோத குழந்தை விற்பனைத் தொழில் நடைபெற்று வருவதால் இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்படும் எனத் தெரிகிறது. குழந்தைக்குப் பேசப்படும் விலை நமக்குச் சொல்வது மனிதம் மரித்து வருவதைத்தான்.
Also Read
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!