Tamilnadu
“குழந்தைகள் விற்பனைக்கு...” - தமிழகத்தின் பெரும் அவலம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட செவிலியர் அமுதாவிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் மூலம் குழந்தைகள் விற்பனையில் தொடர்புடைய செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தரகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
குழந்தைகளின் நிறம், பாலினம், ஆரோக்கியம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து குழந்தைகளின் விலை நிர்ணயிக்கப்படும் என ஓய்வுபெற்ற செவிலியர் பேசியது தமிழக தாய்மார்களையும், பொதுமக்களையும் உலுக்கியது.
சிலபல ஆண்டுகளாகவே இந்த சட்டவிரோத குழந்தை விற்பனைத் தொழில் நடைபெற்று வருவதால் இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்படும் எனத் தெரிகிறது. குழந்தைக்குப் பேசப்படும் விலை நமக்குச் சொல்வது மனிதம் மரித்து வருவதைத்தான்.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!