Tamilnadu
“குழந்தைகள் விற்பனைக்கு...” - தமிழகத்தின் பெரும் அவலம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட செவிலியர் அமுதாவிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் மூலம் குழந்தைகள் விற்பனையில் தொடர்புடைய செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தரகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
குழந்தைகளின் நிறம், பாலினம், ஆரோக்கியம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து குழந்தைகளின் விலை நிர்ணயிக்கப்படும் என ஓய்வுபெற்ற செவிலியர் பேசியது தமிழக தாய்மார்களையும், பொதுமக்களையும் உலுக்கியது.
சிலபல ஆண்டுகளாகவே இந்த சட்டவிரோத குழந்தை விற்பனைத் தொழில் நடைபெற்று வருவதால் இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்படும் எனத் தெரிகிறது. குழந்தைக்குப் பேசப்படும் விலை நமக்குச் சொல்வது மனிதம் மரித்து வருவதைத்தான்.
Also Read
-
இஸ்லாமியர் குறித்த மோடியின் சர்ச்சை கருத்து - எதிர்ப்பு தெரிவித்த பாஜக முன்னாள் நிர்வாகி கைது !
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !