Tamilnadu
“10 குழந்தைகளை வாங்கிக் கொடுத்தேன்” - கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிர்ச்சி தகவல்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், கொல்லிமலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
செவிலியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா, குழந்தை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மருத்துவர், செவிலியர் உட்பட 3 பேர் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் நாமக்கல் பகுதி மருத்துவமனை தகவல்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
விசாரணையின்போது அமுதா கொடுத்த தகவல்களின் அடிப்படையில் குழந்தைகளை பேரம் பேசி விற்ற செவிலியர் பர்வீன், குழந்தைகளை வாங்கிக் கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், கொல்லிமலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஒப்புதல் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், இதில் இன்னும் பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
Also Read
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவலம் : ஒரே படுக்கையில் 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை!