Tamilnadu
பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்
ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
சிலைக்கடத்தல் வழக்குகளை பொன்மாணிக்கவேல் விசாரித்து வரும் நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என பலர் இந்த வழக்கில் சிக்கியிருப்பதால் மத்திய பா.ஜ.க அரசின் துணையை நாடும் விதமாக சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.
பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் வழக்கை சிறப்பாகவே கையாண்டு விசாரித்து வருகிறார். எனவே சி.பி.ஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு குழுவில் உள்ள முன்னாள் காவல்துறை அதிகாரிகள் 66 பேர், தங்களுக்கு தக்க பணிகளை நியமிப்பதில்லை என குற்றஞ்சாட்டி பொன்.மாணிக்கவேலின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பொன்.மாணிக்கவேல் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!