Tamilnadu
ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்துள்ளார் - தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் கடந்த 18ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ஆனால், சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்தார் என்று சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கிய வாக்குச்சாவடி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருந்தார்.
இதேபோல் நடிகர் ஸ்ரீகாந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில், ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்துள்ளதாக சத்யபிரதா சாஹூ தற்போது தெரிவித்துள்ளார்.
Also Read
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!