Tamilnadu
பொன்னமராவதி விவகாரம் : அவதூறாகப் பேசியவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தில் குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறாகப் பேசி, சமூக வலைதளமான வாட்ஸ்-அப்பில் பரவ -விட்டதை அறிந்த மாற்றுச் சமூகத்தினர், தங்களது சமூகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதனையடுத்து, கடந்த 19-ம் தேதியன்று பொன்னமராவதி, குழிபிறை உள்ளிட்ட கிராம மக்கள் சாலையோரம் உள்ள வாகனங்களை அடித்து நொறுக்கியும், ஏராளமான மரங்களை வெட்டிப்போட்டு சாலையை அடைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனால் மாவட்டத்தில் அமைதிக்கு பங்கம் வந்துவிடாமல் காப்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டனர்.
மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கையாக 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கொத்தமங்கலத்தைச் சேர்ந்த குகன் என்பவரை திருச்சிற்றம்பலம் போலீசார் கைது செய்தனர். மேலும் கீரனூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற நபருக்கு வலைவீசி வருகின்றனர்.
Also Read
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!
-
“ஏ.டி.எம் கார்டு மூலம் மாத்திரைப் பொடி.. கில்லி சரத்-ஐ என்ன செய்யப்போகிறார் யோக்கியர் விஜய்” - முரசொலி!
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!