Tamilnadu
மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றிய முடிவு மாலைக்குள் அறிவிக்கப்படும் : சத்யபிரதா சாஹு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு,
தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளை சேர்ந்த 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த கோரிக்கை வந்துள்ளதாக கூறினார். இதனையடுத்து கோரிக்கை எழுந்துள்ள வாக்குச்சாவடிகளில், மறுவாக்குப்பதிவு நடத்தலாமா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு செய்து அறிக்கை தர பணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சிறிய அளவிலான வன்முறை, வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி, கள்ள ஓட்டுக்கள் போட முயற்சி உள்ளிட்ட சம்பவங்களை காரணமாக கூறி குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே இன்று மாலைக்குள் தேர்தல் அதிகாரிகள் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையளிக்க உள்ளனர். அவர்களின் இறுதி அறிக்கை கிடைத்த பிறகு தருமபுரி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் புகார் எழுந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றிய முடிவு மாலைக்குள் அறிவிக்கப்படும் என சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
Also Read
-
”மோடி தோற்காவிட்டால் நாடு கருப்பு நாட்களை பார்க்கும்” : உத்தவ் தாக்ரே எச்சரிக்கை!
-
இஸ்லாமியர்களின் வாக்காளர் அட்டையை சோதனை செய்த பாஜக வேட்பாளர் : குவியும் கண்டனம் !
-
“600க்கு 578; சென்னை அரசுப்பள்ளிகளில் முதலிடம்” - ஏழை மாணவிக்கு உதவிகரம் நீட்டிய எத்திராஜ் கல்லூரி !
-
முதல் முறை IPL அறிமுகம் : ஈழத்தமிழர்களின் நாயகனாக அவதரித்துள்ள யாழ்ப்பாண வீரர் - யார் இந்த வியாஸ்காந்த் ?
-
”பெண்களின் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சி முன்னேற்றும்” : சோனியா காந்தி உறுதி!