Tamilnadu
தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது - கரூரில் அ.தி.மு.கவினர் வன்முறை
40 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. இனி எந்தவிதமான தேர்தல் பரப்புரைக்கும் விளம்பரங்களுக்கு தேர்தல் விதிமுறைகளின்படி அனுமதியில்லை.
திருவாரூரில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
கரூரில் தி.மு.க - காங்கிரஸின் இறுதிக்கட்ட பரப்புரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. ஆனால், அதே இடத்தில் பரப்புரையை செய்ய அ.தி.மு.கவினரும் கேட்டதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
ஆனால், காங்கிரஸ் சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்ததால், பேருந்து நிலையம் அருகே திமுக - காங்கிரஸ் கட்சிகள் பரப்புரை செய்தனர். இருந்த போதும் அதிமுகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். திமுகவினர் மீதும் போலீஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
முன்னதாக கரூர் அருகே தி.மு.கவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வந்த நாஞ்சில் சம்பத்தின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் எந்த வித காயமும் இன்றி தப்பித்தார்.
Also Read
-
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபருக்கு ரூ.1 லட்சம் ஓய்வு ஊதியம் : பெரியார் பல்கலை. உத்தரவால் சர்ச்சை!
-
வட இந்தியர் vs தென் இந்தியர்: தோல்வி பயத்தில் மக்களிடையே பிரிவினையை விதைக்கும் மோடி... வலுக்கும் கண்டனம்!
-
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!
-
மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-
140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?