Tamilnadu
தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது - கரூரில் அ.தி.மு.கவினர் வன்முறை
40 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது. இனி எந்தவிதமான தேர்தல் பரப்புரைக்கும் விளம்பரங்களுக்கு தேர்தல் விதிமுறைகளின்படி அனுமதியில்லை.
திருவாரூரில் தனது இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
கரூரில் தி.மு.க - காங்கிரஸின் இறுதிக்கட்ட பரப்புரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. ஆனால், அதே இடத்தில் பரப்புரையை செய்ய அ.தி.மு.கவினரும் கேட்டதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
ஆனால், காங்கிரஸ் சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்ததால், பேருந்து நிலையம் அருகே திமுக - காங்கிரஸ் கட்சிகள் பரப்புரை செய்தனர். இருந்த போதும் அதிமுகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். திமுகவினர் மீதும் போலீஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
முன்னதாக கரூர் அருகே தி.மு.கவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வந்த நாஞ்சில் சம்பத்தின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் எந்த வித காயமும் இன்றி தப்பித்தார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!