Tamilnadu
தமிழக லோக் ஆயுக்தாவின் முதல் தலைவராக பதவி ஏற்றார் ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ்
முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் பெற்ற அமைப்பு லோக் ஆயுக்தா. தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்கவும், அதன் உறுப்பினர்களை நியமிக்கவும் தமிழக அரசு காலதாமத்தப்படுத்தி வந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து 18-வது மாநிலமாக தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் இன்று பதவியேற்றார். மேலும் இந்த அமைப்பில் 4 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்தவழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இடம் பெற்றிருந்தார். ஆனால், அந்த குழு ஆளுங்கட்சியினரை பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 5 பேர் குழுவாக இல்லை. இதனால் உறுப்பினர்களை தேர்வு நியாயமாக நடக்காது என்பதால், அந்த கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்க முடியாது என்று விலகியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!