Tamilnadu
தமிழக லோக் ஆயுக்தாவின் முதல் தலைவராக பதவி ஏற்றார் ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ்
முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் பெற்ற அமைப்பு லோக் ஆயுக்தா. தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்கவும், அதன் உறுப்பினர்களை நியமிக்கவும் தமிழக அரசு காலதாமத்தப்படுத்தி வந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து 18-வது மாநிலமாக தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் இன்று பதவியேற்றார். மேலும் இந்த அமைப்பில் 4 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்தவழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இடம் பெற்றிருந்தார். ஆனால், அந்த குழு ஆளுங்கட்சியினரை பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 5 பேர் குழுவாக இல்லை. இதனால் உறுப்பினர்களை தேர்வு நியாயமாக நடக்காது என்பதால், அந்த கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்க முடியாது என்று விலகியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!