Tamilnadu
தமிழக லோக் ஆயுக்தாவின் முதல் தலைவராக பதவி ஏற்றார் ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ்
முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் பெற்ற அமைப்பு லோக் ஆயுக்தா. தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்கவும், அதன் உறுப்பினர்களை நியமிக்கவும் தமிழக அரசு காலதாமத்தப்படுத்தி வந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து 18-வது மாநிலமாக தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் இன்று பதவியேற்றார். மேலும் இந்த அமைப்பில் 4 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்தவழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இடம் பெற்றிருந்தார். ஆனால், அந்த குழு ஆளுங்கட்சியினரை பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 5 பேர் குழுவாக இல்லை. இதனால் உறுப்பினர்களை தேர்வு நியாயமாக நடக்காது என்பதால், அந்த கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்க முடியாது என்று விலகியது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!